கண்ணில் கருமை நிற டாட்டூ.! பார்வையை இழந்த இளம்பெண்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • போலந்து நாட்டில் கண்களில் கருமை நிற டாட்டூ போட்டு பார்வையை இழந்து தவிக்கும் இளம்பெண்.

போலந்து நாட்டின் ரோக்லாவ் நகரை சேர்ந்த 25 வயது மாடலான அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற இளம்பெண், ராப் இசை பாடகர் மற்றும் ஃபைட்டரான போபெக் என்பரின் ரசிகையாகவும் இருக்கிறார். போபெக் தனது 2 கண்களில் கருநிற டாட்டோவை போட்டிருப்பார். அதுபோன்று தனக்கும் கண்களில் டாட்டூ போடவேண்டும் என்று அலெக்சாண்ட்ரா, டாட்டூ போடும் நபரை அணுகியுள்ளார். கண்களில் டாட்டூ போடும் அனுபவம் இல்லாத போதிலும், பணத்திற்காக  அந்த நபர் பொய் சொல்லி டாட்டூ போட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அந்த இளம்பெண்ணின் கண்களில் டாட்டூ போட்டு முடித்தவுடன், கண்கள் எரிச்சலாகவும், வலிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். பின்னர் வலி மருந்து ஒன்றை கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த நிலையில் தனது இடது கண்ணின் பார்வையை அந்த இளம்பெண் இழந்துள்ளார். பின்னர் உடனே மருத்துவரிடம் சென்ற அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கண்ணில் கருமை நிற பரவியுள்ளதால் சரிசெய்ய முடியாது கூறிவிட்டனர். மேலும் விரைவில் மற்றோரு கண்ணின் பார்வையும் இழக்கக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலாந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பி டாட்டூ போட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

30 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

57 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

3 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago