பிரபலங்களும், மனிதர்களும் மட்டும் அழவில்லை. அவர் நட்ட மரங்களும் தான் அழுகின்றன. மரணமே உனக்கு சிரிக்க தெரியாது. அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய்.
நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டிருந்த நிலையில், விவேக்கின் பூத உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நல்ல சகோதரனை இழந்து விட்டேன்.
இன்று, பிரபலங்களும், மனிதர்களும் மட்டும் அழவில்லை. அவர் நட்ட மரங்களும் தான் அழுகின்றன. மரணமே உனக்கு சிரிக்க தெரியாது. அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…