உலகம் முழுவதும் கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராக மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என தற்போது விழிப்புணர்வு அடைந்துள்ளனர். எனவே பல இடங்களில் தடுப்பூசிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஆறு வாரங்களாக உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும், கடந்த 4 வாரங்களாக இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடும் பணிகளில் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் மேற்கத்திய நாடுகளில் தான் அதிகம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசிகளை வழங்க முன் வரவேண்டும் எனவும் உலகம் முழுவதும் பரவலாக தடுப்பூசி செலுத்தப்பட்டால் மட்டுமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றை குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…