தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நடிகை மெஹரின் பிர்ஸடா . தமிழில் “நோட்டா”, “பட்டாஸ்” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தற்போது “அஸ்வத் தாமா” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சக நட்சத்திரங்களுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இவர் தங்கியிருந்தார். கடைசி நாளில் மற்றொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தயாரிப்பாளர் மெஹரின் பிர்ஸடா அழைத்தார்.
ஆனால் தனக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு இருப்பதாக கூறி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மெஹரின் பிர்ஸடா மறுப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டால் ஹோட்டலுக்கு வாடகை தர மாட்டேன் என தயாரிப்பாளர் கூறினார்.
இதனால் கோபமடைந்த மெஹரின் பிர்ஸடா மறு நாள் காலையில் யாரிடமும் சொல்லாமலும் வாடகை தராமல் சென்றுவிட்டார். இதையறிந்த ஹோட்டல் நிர்வாகிகள் அறைக்கு வாடகை தரும்படி தயாரிப்பாளரிடம் கேட்டு உள்ளர். அதற்கு தயாரிப்பாளர் வாடகை தர மறுத்துவிட்டார். பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அவர் வாடகையை செலுத்தி விடுவதாக கூறினார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…