மாஸ்டர் திரைப்படம் குறித்து தனுஷ் ட்வீட்..!

Published by
பால முருகன்

தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாஸ்டர் படத்தை தியேட்டர்களில் பாருங்கள் என்று தனுஷ் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மற்றுமின்றி பல நடிகர்கள் காத்துள்ள திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதன்பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படம் தொடர்பாக நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திரையரங்குகளில் பார்வையாளர் அனுமதி 50% லிருந்து 100% ஆக அதிகரிக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது பேசியதாகவும் தகவல் கசிந்தது அதனை தொடர்ந்து நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் படக்குழு மாஸ்டர் திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாவது சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரைப்படங்களைப் பார்ப்பது தியேட்டர் கலாசாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவம்போல வேறு எதுவும் இல்லை. தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படத்தை தியேட்டர்களில் பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

2 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

2 hours ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

2 hours ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

4 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

4 hours ago