சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தினை குறித்து இயக்குநர் கார்த்திக் யோகி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் டிக்கிலோனா, ஓடி ஓடி உழைக்கணும், தில்லுக்கு துட்டு – 3 மற்றும் பிஸ்கோத். இதில் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனரான கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் ஏழுமலையான் தயாரிக்கும் இந்தப் படத்தின் போஸ்ட்ர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மூன்று வேடங்களில் நடிக்கும் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் இயக்குனரான கார்த்திக் யோகி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இதில் சந்தானம் மிடில்கிளாஸ் பையன் மற்றும் விளையாட்டு வீரராக நடிப்பதாகவும், மற்றொரு கதாபாத்திரத்தை சஸ்பென்ஸாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் மூன்று வேடங்கள் என்பதால் ஒரு கதாபாத்திரத்திலிருந்து மற்றொரு கதாபாத்திரத்திற்கு மாற குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் ஆகும் என்றும் கூறியுள்ளார். மேலும் சந்தானம் 48 முறையாவது ஒரு நாளில் கெட்டப் சேன்ஜ் செய்வார், சற்று கடினமாக தான் இருந்தது, இருப்பினும் சந்தானம் தனது கஷ்டத்தை பொருட்படுத்தாமல் முகம் சுளிக்காமல் மிக சிறப்பாக செய்தார் என்று கூறியுள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் டப்பிங் பணிகளை தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…