இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக அட்டகத்தி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்.
தமிழ் சினிமாவில், அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பா.ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து சார்பேட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் , இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில், வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் காத்துள்ளனர்.
இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவி வருகிறது. அதாவது இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக அட்டகத்தி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பா.ரஞ்சித் நீலம் புரடொக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…