ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய விரும்பவில்லை.! வந்தால் 100% உழைப்பை வழங்குவேன் – நடிகர் சோனு சூட்

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய நான் விரும்பவில்லை என்றும் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் 100% உழைப்பை வழங்குவேன் என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தனியார் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சோனு சூட் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியலில் இணைய பல்வேறு வாய்ப்புகள் வந்தது. ஆனால், நடிகனான நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. நான் விரும்பும் பல விசயஙகளை நான் செய்ய வேண்டியுள்ளது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் நுழையலாம். ஆனால், ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய நான் விரும்பவில்லை.

ஒருவேளை அரசியலுக்கு வந்தால் 100% உழைப்பை வழங்குவேன். யாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்வேன். அவர்களுடன் நேரத்தை செலவழிப்பேன். ஆனால், அதற்கு நிறைய நேரம் தேவைப்படும். எனவே, தற்போது நான் அதற்கு தயாராக இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றும் என்னால் எல்லா விஷயங்களையும் பரவலாக செய்யமுடிகிறது. யாரிடமும் நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனாவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி சிலரைத் தனி விமானம் மூலமாகவும், அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும், வறுமையில் வாடிய விவசாயிக்கு ட்ராக்டர், ஸ்பெய்னில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வந்த அவருக்கு, சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வந்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

3 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

4 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

5 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

6 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

7 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

8 hours ago