நமது முகத்தை அழகாக காட்டுவதில் தலைமுடி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தான் லேசான வெள்ளை முடி இருந்தாலும் அதற்காக பல செயற்கையான டைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயற்கையான டைகள் நமது முடியை சேதப்படுத்தும்.
அதற்கு பதிலாக நமது வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்வோம். அதிலும் ஆலிவ் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் போன்று செய்து, எப்படி உபயோகிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உபயோகிக்கும் முறை : ஆலிவ் எண்ணையுடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக பேஸ்ட் போல தயாரித்து தலை முழுவதும் தடவி விடவும்.
இடைப்பட்ட காலம் : தலையில் தடவி 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் சாதாரண ஷாம்பு பயன்படுத்தி அலசி விடவும். இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை : முட்டையின் வெள்ளை கருவுடன், இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணையை கலந்து முடியில் நன்றாக தடவி விடவும்.
இடைப்பட்ட காலம் : தலை முடியில் எண்ணையை தடவி 30 நிமிடம் வைத்திருந்து விட்டு, ஷாம்பு உபயோகித்து அலசி விடவும். இதை வாரம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் முறை : வெங்காய சாற்றுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து, நன்றாக கலந்து இந்த கலவையை முடியில் தேய்த்து விடவும்.
இடைப்பட்ட காலம் : நன்கு ஊறியதும் 30 முதல் 40 நிமிடத்தில் தலையை அலசி விடவும். இதை வாரம் இரு முறை பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை : இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணையில், அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்க்கவும்.
இடைப்பட்ட காலம்: தலையில் தடவி 1 மணி நேரம் முதல் 3 மணி நேரங்கள் வரை இதை அப்படியே ஊற விடலாம். பின் நன்றாக தலையை அலசி விடவும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…