சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!
இந்திய ராணுவம் லடாக்கில் 15,000 அடி உயரத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் (Akash Prime) வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஆகாஷ் பிரைம் என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய ஒரு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு.
இந்நிலையில், இன்றைய தினம் இந்த ஆகாஷ் பிரைம் வான் அமைப்பை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, ராணுவ வான் பாதுகாப்புப் பிரிவால் 15,000 அடிக்கு மேல் உயரத்தில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
லடாக்கில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்பின் உயர் உயர சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. வேகமாக நகரும் வான்வழி இலக்குகளை ஏவுகணைகள் இரண்டு முறை வெற்றிகரமாக தாக்கின.
லடாக்கில் நடந்த இந்த சோதனை, ஆகாஷ் பிரைம் அமைப்பின் திறனை உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தையும் காட்டுகிறது. இதில், புதிய ரேடியோ அலைவரிசை (RF) சீக்கர் பொருத்தப்பட்டுள்ளது, இது இலக்கை மிகவும் துல்லியமாகக் கண்டறிந்து தாக்க உதவுகிறது.குறைந்த வெப்பநிலை மற்றும் உயரமான பகுதிகளில் சிறப்பாக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை வைத்து, எதிர்களின் விமானங்கள், ட்ரோன்கள், மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் போன்ற பல வான்வழி அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள முடியும். இந்த அமைப்பு முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் போது அதன் செயல்பாட்டு வெற்றியை நிரூபித்தது, அங்கு சீன ஜெட் விமானங்கள் மற்றும் துருக்கிய ட்ரோன்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இராணுவத்தின் வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இது உதவியது.
In a significant development, Indian Army today carried out successful trials of the indigenously developed Akash Prime air defence system at over 15,000 feet altitude in the Ladakh sector. The trial were carried out by the Army Air Defence along with senior officials of the… pic.twitter.com/6IKL8xXGP0
— ANI (@ANI) July 16, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025