தைரியசாலியாக இருப்பவர்களிடம் இந்த 7 பண்புகள் காணப்படும்.
தைரியம் என்பது, பயமில்லாமல் இருப்பது அல்ல. ஆனால், அந்த பயத்தை கையாளும் விதம் தெளிவாக, சரியான முறையில் காணப்பட வேண்டும். அப்படி சிலர் எந்த காரியத்தையும், பயமில்லாமல் தைரியமாக மேற்கொள்ளவர்கள். தற்போது இந்த பதிவியில் அப்படிப்பட்டவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்கும் என்பது பற்றி பார்ப்போம்.
ஒரு நாள் மதியம் நீ சுடுகாட்டின் வழியாக நடந்து செல்கிறாய். அப்போது பயம் ஏற்படுடவில்லை. அதேசமயம் ஒரு இரவு அதன் வழியாக நடந்து செல்கிறாய் அப்போது பயப்படுகிறாய். இவ்வாறு பயத்தை எந்த வடிவில், எங்கிருந்து எப்படி பார்க்கிறாய் என்பது அவசியம்.
நம்மிடம் இல்லாத ஒன்றை குறித்து கவலைப்பட்டு, இல்லையே, இல்லையே என்று கவலைப்படக் கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்களை பார்க்கும் போது,எத்தனையோ பேர் 2 கை, கால்கள் இல்லாமல், பல வித நோய்களுடன் காணப்படுகின்றனர். அப்படி, இல்லை என்று கவலைப்படாமல்,இருப்பதை எண்ணி மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
நமக்கு பயம் அல்லது கவலையை கொண்டு வருவது நம்முடைய சிந்தனை தான். அப்படிப்பட்ட சமயங்களில், நம்முடைய சிந்தனையை மாற்றி கொள்ள தெரிய வேண்டும்.
தைரியசாலிகளை பொறுத்தவரையில், அவர்களிடம் தன்னை தானே ஏற்றுக் கொள்ளும் பண்பு அதிகமாக காணப்படும். உங்களிடம் உள்ள குறைகள் மற்றும் மாற்ற முடியாத காரியங்களை ஏற்றுக் கொள்ள பழகுங்கள்.
எந்த ஒரு செயலாக இருந்தாலும், நீதியான, நியாயமான விஷயங்களை மட்டுமே செய்பவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களிடம் பயம் இருக்காது.
தைரியசாலியாக இருப்பவர்கள், தன்னை மற்றவர்கள் ஊக்குவிக்க வேண்டும் அல்லது மற்றவர்கள் தனக்கு ஆறுதல் கூற வேண்டும் என விரும்பமாட்டார்கள்.
வாழ்விலும் ஒரு லட்சியம் இருக்கும். இந்த இலட்சியத்தை அடைய, தைரியசாலிகளாக இருப்பவர்கள், தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…