சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் அருவா படத்தில் கைதி பட வில்லனான அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சூர்யாவின் சூரரை போற்று படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படம் முதலில் திரையரங்குகளில் தான் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஹரி இயக்கத்தில் டி. இமான் இசையமைப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் அருவா. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஷி கன்னா முதல்முறையாக சூர்யாவுடன் இணைந்து ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இதனிடையே சூர்யாவிற்கு வில்லனாக நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும்பியதை அடுத்து, அர்ஜுன் தாஸ் அருவா படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தியின் கைதி படத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும், ஹீரோவாக அந்தகாரம் படத்திலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு முடிந்த பின்னர் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…