தல அஜித்தின் அடுத்த படத்தை பில்லா பட இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்த அனுமதி வழங்கியதை அடுத்து, அஜித் அவர்கள் பலரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் பணிகளை ஆரம்பிக்கலாம் என்று கூறியதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அடுத்த விஷயம் அஜித்தின் 61வது படத்தை குறித்த தகவல்கள் தான். சமீபத்தில் கூட தலயின் அடுத்த படத்தை கோகுலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும், சுதா கே பிரசாத் இயக்க போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமின்றி கார்த்திக் நரேன், வெங்கட் பிரபு, சிவா உள்ளிட்ட இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது. தற்போது தல 61 படத்தை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது . அதாவது தல அஜித் அவர்களின் அடுத்த படத்தை பில்லா மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணுவர்தன் ஏற்கனவே அஜித் அவர்களிடம் கதை கூறியதாகவும், அவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஷ்ணுவர்தன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தன்னிடம் ராஜேந்திர சோழனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஸ்கிரிப்ட் ஒன்றை ரெடி செய்து வைத்திருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதன் உண்மை என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…