“நீங்கள் பதவி காலத்தில் கூறிய பொய்களுக்காக வருந்தியதுண்டா?” – எதிர்பாராத கேள்விக்கு திகைத்த அதிபர் டிரம்ப்!

Published by
Surya

“உங்கள் பதவி காலத்தில் நீங்கள் சொன்ன பொய்களுக்கு வருந்தியதுண்டா?” என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் திகைத்து போனார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் மக்களிடையே உரையாற்றியபோதும் அவர் ஏராளமான பொய் செய்திகளையும், தவறான தகவல்களையும் தெரிவித்துள்ளதாக அவர்மீது தொடர்ந்து குற்றங்கள் சாட்டப்பட்டுக் கொண்டே வருகிறது.

அந்தவகையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்பிடம் ஹஃபிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஷிரிஷ் டேம், “உங்கள் பதவி காலத்தில் நீங்கள் சொன்ன பொய்களுக்கு வருந்தியதுண்டா?” என கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத அதிபர் டிரம்ப், திகைத்து போனார்.

அவரிடம் தொடர்ந்து அதே கேள்வியை கேட்க, சிறிது நேரம் அமைதியாக இருந்த டிரம்ப், இந்த கேள்வியை புறக்கணித்து, மற்றொரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அந்த பத்திரிகையாளர், அதிபர் டிரம்பிடம் இந்த கேள்வியைக் கேட்க 5 ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

37 minutes ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

1 hour ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

2 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

2 hours ago

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

3 hours ago