தலைமுடி கொத்து கொத்தாக உதிர்கிறதா? அப்போ தலைக்கு குளிக்கிறப்ப இதை செய்யுங்க..!ஒரு முடி கூட உதிராது.

Published by
Sharmi

தலைமுடி பராமரிப்பு என்பது ஆண்கள், பெண்கள் என இருவரும் கவனித்து கொள்ள கூடிய விஷயம். அதிலும் முடி உதிர்வு என்பது சிலருக்கு அதிகப்படியாக இருக்கும். என்னசெய்வதென்று தெரியாமல் கவலையிலேயே பலருக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கும். இதற்கு எளிதான சில டிப்ஸ் இன்று தெரிந்துகொள்ளுங்கள்.

முதல் டிப்ஸ்: முதலில் அரிசி கழுவிய தண்ணீர் இதற்கு மிகவும் அவசியம். அரிசி கழுவிய தண்ணீரில் 1 டம்ளர் அளவு எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்த பிறகு நல்ல தண்ணீரில் நன்கு அலசி கொள்ளுங்கள். பின்னர் இந்த அரிசி தண்ணீரில் நன்கு தலையில் தேய்த்து அலசி கொள்ளுங்கள். இது படிப்படியாக முடி உதிர்வை தடுக்கும்.

இரண்டாம் டிப்ஸ்: முடி உதிர்வே இல்லாமல் இருக்க இந்த ஒரு ஹேர் பேக் போதும். அதற்கு முதல்நாள் இரவு ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் பச்சை பயிறு, 2 ஸ்பூன் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். வேறொரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறிய அரிசியை குழைய குழைய வடித்து எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிது கஞ்சியோடு மிக்சியில் சேர்த்து ஏற்கனவே ஊறிய பச்சை பயிறு, வெந்தயம் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு தலையில் வேர்க்கால்களில் படும்படி தடவி கொள்ளுங்கள். நுனி முடி வரை இந்த பேஸ்டை தடவி கொள்ளுங்கள். இதனை நன்கு ஊற வைத்து தலையை அலசி கொள்ளுங்கள். இதன் பிறகு உங்களுக்கு முடி உதிர்வு என்பதே இருக்காது. மேலும், முடியும் அடர்த்தியாக வளரும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வரலாம். மேலும் சளி பிடிக்கும் என்றால் விளக்கெண்ணெய்க்கு பதிலாக மற்ற இரண்டு எண்ணெய்களில் எதாவது ஒன்றை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago