பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற உள்ளதாகவும் , ஒருவர் இன்று வெளியேறுவார் என்றும் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று சனிக்கிழமை என்பதால் பல பிரச்சனைகளுக்கு தீர்வை கமல் கூறுவார் என்றும்,பலரை வச்சு செய்வார் என்றும் கூறப்படுகிறது.அதனுடன் எலிமினேஷனும் நடைபெறவுள்ளது.இந்த வார நாமினேஷனில் ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், நிஷா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .இதில் குறைவான வாக்குகளை பெற்ற நபர் வெளியேறுவது வழக்கம் .இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டு பேர் வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதனை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார் . தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில், கமல்ஹாசன் தோன்றி பலமுறை சொல்லிட்டேன் , ஜோடியாக விளையாடினால் ஜோடியாக வெளியேற வேண்டியிருக்கும்,கூட்டமாக விளையாடினால் கூண்டோடு கைலாசம் தான்,ஆனால் அவர்கள் கேட்டபாடில்லை .நான் கேள்விப்பட்ட வரையில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் அதில் ஒன்றை இன்றே செய்வோம் என்று கூறுகிறார்.எனவே இந்த வாரம் நாமினேட் ஆன ஆறு போட்டியாளர்களில் யார் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…