Elon Musk’s Tesla:இந்திய முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. டெஸ்லா நிறுவனத்திற்கு ஒப்புதல்..!

Published by
Edison

டெஸ்லா (Tesla) நிறுவனம்,இந்தியாவில்,தனது நான்கு கார் மாடல்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.

இந்தியாவில்,பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால்,பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், எலக்ட்ரிக் வாகனம் மற்றும் கார் தயாரிப்புகளில் உலகளவில் முன்னிலையில் உள்ள நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க திட்டமிட்டு ,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் மீதான இறக்குமதி வரியை 40% ஆக குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது,ஆனால்,மத்திய அரசு இதனை நிராகரித்தது.

இந்நிலையில்,டெஸ்லா (Tesla) நிறுவனம்,இந்தியாவில்,தனது நான்கு எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு ஹோமோலேஷன் (homologation) நிலையிலான நிபந்தனைகளை பூர்த்தி செய்து இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதலை பெற்றுள்ளது. ஹோமோலோகேஷன் என்பது இந்திய சாலைகளில் வாகனத்தை ஓட்ட தேவையான அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்துள்ளது என்பது பொருளாகும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாகன் சேவா, டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி ஆகியவற்றிலிருந்து வெளியிடப்பட்ட விவரங்களின்படி, டெஸ்லாவின் இந்திய துணை நிறுவனம் அதன் நான்கு மாடல் வாகனங்களுக்கும் ஒப்புதல்களைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும்,அதன் மாடல்களின் குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.ஆனால் டெஸ்லாவின் பல சோதனை கார்கள் இந்திய சாலைகளில் காணப்படுகின்றன.குறிப்பாக, மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கடந்த பல வாரங்களாக இந்தியாவில் சோதனைகளில் உள்ளன.

இதற்கிடையில்,இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், விண்டு ஷீல்டு, கியர், பிரேக் மற்றும் பவர் சீட்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் உதிரி பாகங்களைத் தயாரிக்க,சோனா காம்ஸ்டார், சன்தார் டெக்னாலஜிஸ் மற்றும் பார்த் போர்ஜ் ஆகிய 3 நிறுவனங்களிடம் டெஸ்லா முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.எனவே,இந்நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.இதனால்,இவைகளில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்தான் என்று தகவல் தெரிவிக்கின்றன.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

3 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

3 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

4 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

5 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

6 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

6 hours ago