கொரோனா பாதிப்பில் இத்தாலியை விட உயிரிழப்பில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இதன் தாக்கம் குறையாமல் பல நாடுகளில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து உலகம் முழுவதும், 3,728,047 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 258,356 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும், கொரோனாவிலிருந்து 1,242,500 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இதுவரை இத்தாலியில் 213,013 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 29,315 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடமாக இத்தாலி தான் கருதப்படுகிறது.
ஆனால், தற்பொழுது இங்கிலாந்தில் 194,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 29,427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியை விட இங்கிலாந்து உயிரிழப்பில் அதிகம் உள்ளது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…