எனை நோக்கி பாயும் தோட்டா இத்தனை பிரச்சனைகளை கடந்து நாளை வெளியாகுமா?!

Published by
மணிகண்டன்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் உருவாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் பட ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதிக கடன் பிரச்சினையால் படம் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த கடன் பிரச்சனைகளை கோமாளி பட தயாரிப்பாளர் ஓரளவு தீர்த்து உள்ளதாகவும்,  அதனை அடுத்து தான் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது என தகவல் வெளியானது. அதற்கடுத்ததாக இந்த படத்தின் விநியோகஸ்தர் ராஜராஜன் ஏற்கனவே பாகுபலி, சிந்துபாத் படங்களின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கடன் பாக்கி செலுத்தாமல் உள்ளார். என புது சிக்கல் எழுந்தது.

இதனை அடுத்து, மீண்டும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம். ராஜராஜனுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையில் ஒரு நபரை நியமித்து பிரச்சனைகளை தீர்க்க வழி வகுத்துள்ளது.

அதற்குள் இன்னொரு பிரச்சனையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படம், செங்கல்பட்டு ஏரியாவில் நஷ்டம் என கூறி செங்கல்பட்டு ஏரியா விநியோகிஸ்தர்கள் ENPT படத்தை  இன்னும் வாங்காமல் உள்ளனராம். அதற்கு நேற்று வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனால் தான் இன்னும் இப்படத்திற்கான பூக்கிங் பெரிய மால், தியேட்டர்களில் ஆரம்பமாகவில்லையாம்.  படம் நாளை வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்! 

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

26 minutes ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

1 hour ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

4 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

5 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

5 hours ago