#BREAKING : தெற்காசியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.65 மில்லியன் டாலர் நிதியுதவி.!

Published by
murugan

தெற்காசியாவில்  குறிப்பாக பங்களாதேஷ், இந்தியா மற்றும் நேபாளத்தை பாதித்த கடுமையான வெள்ளத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.65 மில்லியன் டாலர் உதவி நிதியை வழங்க உள்ளது.

இந்தியா மற்றும் பங்களாதேஷை மிகவும் சேதப்படுத்திய ஆம்பான் சூறாவளி உள்ளிட்ட தொடர்ச்சியான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆதரிப்பதற்காக  இந்த  நிதி உதவியை வழங்க உள்ளது என டாக்காவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் வெள்ளத்தால் சுமார் 17.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், கால்நடைகள், விவசாய நிலங்கள் , சாலைகள், மருத்துவமனைகள் , பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் அழித்துள்ளது.

தெற்காசியா முழுவதும் பருவமழை குறிப்பாக இந்த ஆண்டு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசர பங்களிப்பு தங்குமிடம், உடைமைகள் மற்றும் வாழ்வாதார ஆதாரங்களை இழந்தவர்களுக்கு முக்கியமான ஆதரவை  பங்காளிக்க உதவும் கூறப்பட்டுள்ளது.

மொத்த நிதியிலிருந்து, 1 மில்லியன் பங்களாதேஷில் அவசரகால  தேவைகளை நிவர்த்தி செய்யப்படும், அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு , நீர், சுகாதாரம், சுகாதாரம் மற்றும் அவசரகால தங்குமிடம் தேவைப்படுகிறது. சுமார் 850,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்வதால்இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  500,000 மில்லியன் இந்தியாவிற்கு உணவு மற்றும் வாழ்வாதார உதவி, அவசர நிவாரண பொருட்கள் மற்றும் நீர் மற்றும் சுகாதார சேவைகளை வழங்க பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

30 minutes ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

2 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

3 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago