வீரமரணமடைந்த பழனி உட்பட 20 ராணுவ வீரர்களுக்கு இரங்கலை தெரிவித்த பிரபல நடிகர்.!

Published by
Ragi

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இராணுவ வீரர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரபல நடிகரான செந்தில் தெரிவித்துள்ளார்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இராணுவ வீரர்களுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் ‌.

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான செந்தில் வீரமரணமடைந்த பழனி மற்றும் பிற வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,சீன எல்லைக்கும் இந்திய எல்லைக்கும் ஒரு தகராறு ஏற்பட்டது.அந்த தகராறில் சில பேர் மரணமடைந்தார்கள். சில பேர் காயமடைந்தார்கள் . அதில் நம் தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் ஜில்லாவை சேர்ந்த பழனி என்பவர் பல ஆண்டுகளாக எல்லையில் பணியாற்றியுள்ளார்.அவர் இப்போது வீரமரணம் அடைந்துள்ளார்.அவருக்கும் அவரது இல்லத்தில் வாழும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

2 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

3 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

4 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

4 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

5 hours ago

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…

5 hours ago