பிரபல இயக்குனரும், நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது வழக்குப்பதிவு…!

Published by
லீனா
  • மத்திய அரசு கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது.
  • நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது வழக்குப்பதிவு.

லட்சதீவில் சமீபகாலமாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. லட்சத்தீவு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இதன் நிர்வாகத் தலைவராக பிரபுல் ஹோடா படேல் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான நிர்வாகம் ஒரு விதத்தில் மக்களுக்கு எதிரான பல்வேறு சட்ட திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடை, மதுபானத்திற்கான தடை நீக்கம், குண்டர் சட்டத்தை அமல்படுத்துதல் போன்ற மக்களுக்கு விரோதமான சட்டங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து லட்சத்தீவு சேர்ந்த மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில், லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த, பிரபல இயக்குனரும் நடிகையுமான சுல்தானா கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த விவாதத்தில், மத்திய அரசு கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, லட்சதீவில் கொரோனா வைரஸ்  பரவியது குறித்து சுல்தானா தவறான செய்திகளை பரப்பியதாக, பா.ஜ.க.வின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர் கவரட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் 153 பி (வெறுப்பு பேச்சு) பிரிவுகளின் கீழ் சுல்தானா  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாஜக-வினர் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

6 minutes ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

44 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago