வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்.!

Published by
Ragi

வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.ஆர்.ஸ்டுடியோஸ் 5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கூறியுள்ளார்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் வீர மரணம் அடைந்த பழனிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ராமநாதபுரம் ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார். வீரமரணமடைந்த பழனியின் உடல் இன்று மாலை ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைவதாக கூறப்படுகிறது.பல பிரபலங்கள் பழனியின் வீரமரணத்திற்கு சலாட் செய்து தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் விரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு 5லட்சம் நிதி வழங்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் பகிர்ந்த பதிவில் கூறியதாவது,பனி ,வெப்பம் ,தாகம்,குளிர் ,பட்டினி மற்றும் தங்கள் குடும்பங்களை கூட பிரிந்து போராடிய வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்குகிறோம் . அவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்.தமிழ் வீரரான பழனியின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.எந்தவொரு பணமும் ஒரு போர்வீரனின் மரணத்திற்கு சமமாக இருக்காது. ஆனால் எங்களால் முடிந்த சிறிய விஷயத்தை செய்கிறோம். பழனியின் குடும்பத்தினருக்கு அவரது வலிமையான தியாகத்திற்காக 5 லட்சம் பணம் உதவி செய்கிறோம் என்றும் ,அவரது ஆத்மா‌ சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

3 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

3 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

4 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

4 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

5 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

5 hours ago