வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய பிரபல தயாரிப்பு நிறுவனம்.!

Published by
Ragi

வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.ஆர்.ஸ்டுடியோஸ் 5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கூறியுள்ளார்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் வீர மரணம் அடைந்த பழனிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ராமநாதபுரம் ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார். வீரமரணமடைந்த பழனியின் உடல் இன்று மாலை ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைவதாக கூறப்படுகிறது.பல பிரபலங்கள் பழனியின் வீரமரணத்திற்கு சலாட் செய்து தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் விரமரணமடைந்த பழனியின் குடும்பத்திற்கு 5லட்சம் நிதி வழங்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் பகிர்ந்த பதிவில் கூறியதாவது,பனி ,வெப்பம் ,தாகம்,குளிர் ,பட்டினி மற்றும் தங்கள் குடும்பங்களை கூட பிரிந்து போராடிய வீரர்களின் தியாகத்திற்கு தலை வணங்குகிறோம் . அவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்.தமிழ் வீரரான பழனியின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.எந்தவொரு பணமும் ஒரு போர்வீரனின் மரணத்திற்கு சமமாக இருக்காது. ஆனால் எங்களால் முடிந்த சிறிய விஷயத்தை செய்கிறோம். பழனியின் குடும்பத்தினருக்கு அவரது வலிமையான தியாகத்திற்காக 5 லட்சம் பணம் உதவி செய்கிறோம் என்றும் ,அவரது ஆத்மா‌ சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago