அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கெனோஷா நகரில் ஜேக்கப் பிளேக் என்ற கருப்பின இளைஞரை போலீசார் 7 முறை துப்பாக்கியால் சுட்டனர். தற்போது, ஜேக்கப் பிளேக் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜேக்கப் பிளேக்கை துப்பாக்கியால் சுட்ட போலீசார் கைது செய்ய வேண்டும், மற்ற போலீசாரை பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால், போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். அப்போது கூட்டத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பேசும்பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…