பெற்றோர்களே..!கொரானா மூன்றாம் அலையிலிருந்து குழந்தையை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!

Published by
Edison

கொரோனா 3 ஆம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை முறைகளை கடைபிடியுங்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவலானது தீவிரமடைந்துள்ள நிலையில்,மத்திய ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

அதன்படி,இந்தியாவில் கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

எனவே,கொரானாவின் மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றலாம்:

அந்த வகையில்,முதலாவதாக குழந்தைகளை வெளியே விடக்கூடாது.அதன்பின்னர்,குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பழங்கள்,காய்கறிகள்,பயறு வகைகள்,குறிப்பாக: பீன்ஸ் மக்காச்சோளம், தினை, ஓட்ஸ்,கோதுமை, இறைச்சி,மீன், முட்டை மற்றும் பால் ஆகியவை பின்வருமாறு கொடுக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் சமைத்த காய்கறிகள்:

தினமும்,2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1 கப்,4 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1.5 – 2 கப்.14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு 2.5 – 3 கப் கொடுக்க வேண்டும்.

புரதச்சத்து:

சால்மன்,மத்தி,கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் மற்றும் இறைச்சி ஆகியவை வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும்.(குறிப்பு:5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த முறையில் கொடுக்க வேண்டும்)

பால் :

தினமும் காலை,மாலை,இரவு என 3 வேளையும் முழு டம்ளர் அளவில் பால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இதர :

  • தினமும்,நிலவேம்பு அல்லது கபசுரக் குடிநீர் கசாயம் குறிப்பிட்ட அளவு கொடுக்க வேண்டும்.
  • தினமும்,இரண்டு அல்லது மூன்று லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும்.ஏனெனில்,தண்ணீர் குடிப்பதால்,இரத்தத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கடத்தப்பட்டு உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.மேலும் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.
  • மீன் எண்ணெய்,வெண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்றவைகளில் சமைத்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
  • உடைகளை கிருமிநாசினியும் கல் உப்பும் கலந்த தண்ணீரில் ஊறவைத்துத் துவைத்து பயன்படுத்துங்கள்.
Published by
Edison

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

7 hours ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

7 hours ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

8 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

9 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

9 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

10 hours ago