பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து ஆன்லைனில் வெளியாகிறதா அட்லி படம்.!

Published by
Ragi

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை தொடர்ந்து அட்லியின் அந்தகாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கியது. மேலும் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் தியேட்டர்கள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில் பல படங்களை ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகியது. அதனையடுத்து கீர்த்தி சுரேஷின் பெங்குயின் படத்தையும் அமேசான் பிரேமில் ரிலீஸ் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அட்லி தயாரிப்பில் உருவாகும் அந்தகாரம் படத்தினை நெட்ப்ளிக்ஸ்  தளத்தில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான Aforapple உடன்  இயக்குநர் அட்லி வழங்கும் இந்த படத்திற்கு ‘அந்தகாரம்’ என்ற டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை விக்னராஜன் இயக்க பிரதீப் குமார் இசையமைக்கிறார். மேலும் ஓ2 பிச்சர்ஸூடன் இணைந்து  பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மேலும்   சுதன் சுந்தரம், பிரியா அட்லி, ஜெயராம், கே. பூர்ணா சந்திரா மற்றும்  தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ. எம். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்கிறார். மேலு‌ம் கைதி பட வில்லனும், மாஸ்டர் பட நடிகருமான  அர்ஜுன் தாஸ் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வினோத் கிஷன், பூஜாராமசந்திரன், மிஷா கோஷால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படம் ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக கூறியதற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 minutes ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

40 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

6 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago