அமெரிக்கா வரலாற்றிலேயே முதன்முறையாக ஜோ பைடன் நிர்வாகத்தில், அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று உலக நாடுகள் முழுவதும் ஆண்கள், பெண்களைப் போலவே மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்கா வரலாற்றிலேயே முதன்முறையாக ஜோ பைடன் நிர்வாகத்தில், அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்துக்கு குடியரசுக் கட்சியினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் மசோதா செனட் சபையில் புதன்கிழமை என்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இவர் 52 க்கு 48 என்ற ஆதரவு வாக்குகள் வித்தியாசத்தில் துறை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரேச்சல் லெவின் இதற்கு முன்பதாக பென்சில்வேனியாவின் சுகாதார செயலாளராக இருந்துள்ளார். மாநில மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது துணை சுகாதார செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் முதல் லத்தீன் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…