விநாயகர் சதுர்த்தி 2021: சந்திரனை பார்க்க கூடாத நேரம்..!ஏன் பார்க்க கூடாது..!

Published by
Sharmi

விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்க கூடாத நேரங்கள் என்ன மற்றும்  ஏன் பார்க்கக்கூடாது என்றும் தெரிந்து கொள்ளலாம். 

விநாயகர் சதுர்த்தி 2021: சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனான கணேசன் பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா, செப்டம்பர் 10 இன்று தொடங்கி, 10 நாட்களுக்குப் பிறகு ஆனந்த் சதுர்த்தசி அன்று முடிவடையும். இது கணேஷ் விசர்ஜன் நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

சதுர்த்தி திதி செப்டம்பர் 10, 2021 அன்று அதிகாலை 12:18 மணிக்கு தொடங்கி, 2021 செப்டம்பர் 10 அன்று இரவு 9:57 மணிக்கு முடிவடைகிறது. தொடக்க கடவுளாக கருதப்படும் விநாயகர் சடங்குகள் மூலம் கௌரவிக்கப்படுகிறார்.  இருப்பினும், இன்று பண்டிகையின் முதல் நாள் மற்றும் இந்த சிறப்பு மிகுந்த நாளில், நாம் வானத்தில் உள்ள சந்திரனைப் பார்க்கக்கூடாது.

நாம் ஏன் சந்திரனைப் பார்க்கக் கூடாது:                                                            ஒருவர் விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று நம்பப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று ஒருவர் சந்திரனைப் பார்த்தால், அவர்கள் திருட்டு குற்றச்சாட்டுகளால் சபிக்கப்படுவார்கள் மற்றும் சமூகத்தால் அவமதிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

புராணத்தின் படி, பகவான் கிருஷ்ணர் மித்ய தோஷத்திற்கு ஆளாகிவிட்டார். சியமந்தகா என்ற விலைமதிப்புள்ள நகையைத் திருடியதாக அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. பகவான் கிருஷ்ணரின் அவலநிலையைப் பார்த்து நாரத முனிவர், பத்ரபாத சுக்ல சதுர்த்தி நாளில் கிருஷ்ணர் சந்திரனைப் பார்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதனால் தான், அவர் மித்ய தோஷத்தால் சபிக்கப்பட்டுள்ளார். மித்ய தோஷத்திலிருந்து விடுபட விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிக்குமாறு நாரத முனிவர் பகவான் கிருஷ்ணருக்கு அறிவுறுத்தினார்.

விநாயகர் சதுர்த்தி 2021: சந்திரன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டிய நேரம்
திரிக்பஞ்சாங்கத்தின் படி, சதுர்த்தி திதி நிலவும் போது சந்திரனை பார்க்கக்கூடாது. எனவே, காலை 9:12 மணி முதல் இரவு 8:53 மணி வரை நீங்கள் சந்திரனைப் பார்க்கக்கூடாது. (காலம்: 11 மணி 41 நிமிடங்கள்)

ஒருவேளை நீங்கள் சந்திரனைப் பார்த்தால் என்ன செய்வது?
விநாயகர் சதுர்த்தியில் நீங்கள் சந்திரனைப் பார்த்தால், சாபத்திலிருந்து விடுபட பின்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்:

சிம்ஹா ப்ரசேனமாவதீத்ஸிம்ஹோ ஜாம்பவதா ஹதஹ் |
சுகுமாரகா மரோதிஸ்தவா ஹ்யேஷா ஸ்யமந்தகஹ் ||

Recent Posts

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

16 minutes ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

3 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

3 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

4 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

4 hours ago

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் – சீமான் ஓபன் டாக்!

சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…

5 hours ago