பாகிஸ்தானில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் வாஷுக் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 5 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திங்கள்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுவெடிப்பு குறித்த தகவல்களை மாவட்டத்தின் மாஷ்கெல் பகுதியின் உதவி ஆணையர் ஹமீத் ஹம்சா பாங்குல்சாய் பகிர்ந்து கொண்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வாஷுக் மாவட்டத்தின் மாஷ்கெல்லில் ஒரு வெல்டிங் பட்டறையில் ஒரு பெருவெடிப்புடன் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக ஆணையர் ஹமீத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸாரும், மீட்புக் குழுக்களும் வெடிப்பு நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாடிக்கையாளர்கள் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டரை சரிசெய்ய தொழிலாளர்கள் வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது வெடிப்பு நிகழ்ந்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…