சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் 2010ல் வெளியாகி பல இளசுகளின் மனதை கவர்ந்த படம் விண்ணை தாண்டி வருவாயா. இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்கள் மட்டுமில்லாமல் வசனங்களும் காதல் செய்பவர்களின் பேவரட் என்று கூறலாம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் ஹிட் அடித்தது. எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கௌதம் மேனன் முடிவு செய்ததோடு கதையும் எழுதி முடித்துள்ளதாக கூறப்பட்டது .
நேற்றைய தினம் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்தின் முன்னோட்டமாக திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் கௌதம் மேனன். இதில் 10வருடங்களுக்கு பின்னர் கார்த்திக் ஜெஸ்ஸியை தொலைபேசியில் அழைத்து பேசுகையில், கார்த்திக் நீ எனக்கு வேண்டும் என்று சொல்ல, ஜெஸ்ஸியோ நீ எனது மூன்றாவது குழந்தை என்று கூறுவது போன்ற கதையாகும். இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் விமர்சனங்களையும் பெற்றது. இந்த குறும்படமத்தினை 7மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். எனவே இதிலிருந்து கௌதம் மேனன் அவர்களுக்கு சுமார் 20 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் வாசுதேவ் மேனன் ஏற்கனவே இதிலிருந்து வரும் பணத்தை அனைவருக்கும் சரிசமமாக பிரித்து கொடுப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…