அமெரிக்க தேர்தலில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் அதிபர் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பது பெரிதாகவோ பார்க்கப்படுகிறது. இரண்டு சபைகளில் ஏதாவது ஒன்றில் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் இருந்தால் அதிபர் தான் நினைத்ததை செயல்படுத்தவது கடினம்.
ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் ஜனநாயக கட்சி இந்த இரண்டு சபையிலும் அதிகத்தை செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் செனட் தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி இரண்டும் போதிய வாக்குகளை பெறாததால் நேற்று மீண்டும் மறு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி கட்சியை சார்ந்த வார்னாக் மற்றும் ஜான் ஓசோஃப் 2 பேர் வெற்றி பெற்றதால், செனட்டில் ஜனநாயக கட்சியின் பலம் 48 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அதிகம் செலுத்தி வந்த குடியரசு கட்சியின் பலம் 52-லிருந்து 50 ஆக குறைந்தது. இதனால், செனட் சபையில் குடியரசு கட்சி பின்னடைவை சந்த்தித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு செனட் சபை ஜனநாயக கட்சியின் கைக்கு வந்துள்ளது.
மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் தான் செனட் சபை நடக்கும் என்பதால், தற்போது தேர்வாகியுள்ள அதிபர் ஜோ பைடன் எடுக்கும் முடிவுகள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் எளிதாகவே வெற்றிபெறும்.
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…