கூகுள் பே செயலியில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், ஆப் ஸ்டாரில் இருந்து கூகுள் பே செயலி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
உலகளவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக “கூகுள்-பே” உள்ளிட்ட பல செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, உள்ளிட்ட அன்றாட சேவைகளை மேற்கொள்ளலாம்.
இந்த கூகுள் பே செயலி, இந்தியாவில் உள்ள ஆப் ஸ்டார் பயனர்களுக்கு நீக்கப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், அந்த செயலி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் விளக்கமளித்தார். அதில் அவர், iOS பயனர்கள் சிலர், கூகுள் பே செயலியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தங்கள் குழு விரைவாக சரிசெய்யும் என தெரிவித்தனர். இந்த சிரமத்திற்கு பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…
டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP…
ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயால் மீது, ராஜஸ்தானைச் சேர்ந்த 17…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜூலை 23, 2025 அன்று வாஷிங்டனில் நடந்த செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 9 துறைமுகங்களில் ஒன்றாம்…