இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் இணையதளத்தை நம்பி உள்ளனர். ஆடை வாங்குவதில் இருந்து பணம் அனுப்பும் வரை அனைத்தையும் டிஜிட்டல் வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இது நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது என்றாலும், இதில் மோசடி செய்யும் கும்பல் களும் அடங்கி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் வசிக்கும் ஒரு நபர் கூகுள் பே மூலம் ஒரு லட்ச ரூபாயை இழந்தார். இதுபோன்ற ஊழல்கள் நடக்காமல் இருக்க, கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட அந்த நபரை நீங்கள் பிளாக் செய்யும் முறையை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இல் அறிவித்தது.
1. முதலில் உங்களது மொபைலில் கூகுள் பே செயலிக்கு உள்நுழையவும்.
2. நீங்கள் இதுவரை மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளை பார்க்க ஸ்லைடு அப்(slide up) செய்ய வேண்டும். அதே இடத்தில் உங்களிடம் பணம் கோரிய காண்டாக்ட் விவரங்களும் பட்டியலாகி இருக்கும்
3. அதில் நீங்கள் பிளாக் செய்யும் நபரை தேர்வு செய்ய வேண்டும்.
4. அவரின் தொலைபேசி எண் உங்களின் காண்டக்ட்டில் பதிவு செய்திருந்தால், மோர் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
5. அங்கு அந்த நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்.
6. ஒருவேளை நம்பர் சேவ் செய்யப்படவில்லையெனில், பிளாக் செய்வதற்கான ஆப்ஷன் தானாக தெரியும்.
7. அதில் நீங்கள் அந்த நபரை பிளாக் செய்யலாம்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…