ஜப்பானின் ககோஷிமா மற்றும் ஒக்கினாவா நகரங்களுக்கு இடையே மையம் கொண்டுள்ள “ஹைஷென் புயல்” தெற்கு ஜப்பானில் கடந்த சென்ற பிறகுபோக்குவரத்து முடங்கியது. புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டன, பெரும்பாலான உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. 10 விமான நிலையங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இன்று அல்லது நாளை ஜப்பானில் கியுஷு தீவை டைபூன் “ஹைஷென் புயல்” கடக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், ஜப்பானில் சுமார் எட்டு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த புயல் காரணமாக, 22 ஆயிரம் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று புயலின் வேகம் மணிக்கு 252 கிமீ (157 மைல்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புயலை சுனாமியுடன் ஒப்பிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உருவான “மேசக் “புயலால் ஜப்பான் மற்றும் கொரிய தீபகற்பத்தில் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களை சேதப்படுத்தியது. மேசக் புயல் கடந்து செல்லும்போது ஒரு கால்நடை சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.
இந்த கப்பலில் பயணம் செய்த 43 பணியாளர்களில் இருவர் மீட்கப்பட்டனர் மற்றும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இந்த கப்பல் நியூசிலாந்திலிருந்து 5,800 மாடுகளை சீனாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…