கீரை சாதம் சாப்பிட்டு இருக்கீங்களா …..! எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

தினமும் புளி குழம்பு, மீன் குழம்பு, சாம்பார் சாப்பிட்டு பலருக்கும் போர் அடித்து போயிருக்கும். எனவே, இவ்வாறு சாப்பிட்டதையே சாப்பிடுவதற்கு பதிலாக தினமும் வித்தியாசமான சாதங்களை செய்து சாப்பிடுவது தான் அனைவருக்கும் பிடிக்கும். இன்று எப்படி நாம் சீரக சம்பா அரிசியில் கீரை சாதம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • சீரக சம்பா வடித்த சாதம்
  • எண்ணெய்
  • கடுகு
  • சீரகம்
  • காய்ந்த மிளகாய்
  • வெந்தயம்
  • இஞ்சி
  • தக்காளி
  • கருவேப்பிலை
  • உப்பு
  • மஞ்சள்தூள்
  • துவரம் பருப்பு
  • அரை கீரை
  • மிளகாய்த்தூள்

செய்முறை

தாளிக்க : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் சீரகம், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.

விழுது : பின்பு இதனுடன் இஞ்சி, தக்காளி, மஞ்சள்தூள்,  பொடியாக நறுக்கி அரைக்கீரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுது போல வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இதனுடன் தேவையான அளவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துள்ள துவரம்பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.

spinachrice

சாதம் : 2 நிமிடம் கழித்து வடித்து வைத்துள்ள சீரக சம்பா சாதத்தை  கொட்டி கிளறி வைத்து விட வேண்டும். அவ்வளவு தான் அட்டகாசமான சீரக சம்பா கீரை சாதம் தயார். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

Published by
Rebekal

Recent Posts

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

12 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

48 minutes ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

1 hour ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

2 hours ago