கனமழை எதிரொலி : ஆப்கனிஸ்தானில் 70 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published by
Rebekal

ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை ஆப்கானிஸ்தானில் கோடை காலமாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை மழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவில் பெய்வதுண்டு. அதன்படி ஆண்டுதோறும் அங்கு அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி ஆப்கானிஸ்தானில் இடைவிடாத கனமழை பெய்துள்ளது. இதனால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்து உள்ளதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி உள்ளது. இந்த வெள்ளத்தில் 300 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த வெள்ளத்தில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பலர் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலர் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது எனவும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

7 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

7 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

8 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

9 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

9 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

9 hours ago