கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் இந்த படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்புடன் போஸ்டரை வெளியிட்டார். இதில் விஜய்சேதுபதி நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு 2வது முறைகயாக இவரது படத்தில் நடிக்கிறார். பின்னர் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் ஒன்றாக இந்த படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை சமந்தா அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என சமந்தா தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றும், அதற்கான படப்பிடிப்பை தொடங்க மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தன்னுடைய பங்கு படத்திற்கு வலுவானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…