நாள் முழுதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள்!

Published by
Rebekal

காலையில் நாம் செய்யக்கூடிய செயல்முறைகள் தான் அந்த நாள் முழுதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும், அவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

காலை நேரத்தில் எழுந்ததும் நாம் தற்போதெல்லாம் மொபைல்களை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு மணி நேரம் படுக்கையிலேயே உருண்டு கிடக்கிறோம். இதனால் அந்த நாள் முழுவதும் நிச்சயம் நாம் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள முடியாது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் காலையில் நாம் செய்ய கூடிய உடற்பயிற்சிகளும் நம்முடைய வழக்கமான பழக்கவழக்கங்களும் தான் நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும். இவ்வாறு நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதற்கு சில வழிமுறைகளை அறிந்து கொள்வோம். அதாவது காலையிலேயே அந்நாள் முழுதும் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து முதலில் நாம் யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நமக்கு இன்று என்ன வேலை இருக்கிறது என்பதை முதலில் நாம் அட்டவணைப்படுத்தி வைத்துக் கொண்டு அதன்படி ஒவ்வொன்றாக செயல்முறை படுத்த முயற்சிக்க வேண்டும். அடுத்ததாக நாம் காலையில் எழுந்ததும் ஒரு சிறிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது நாம் சுறுசுறுப்புடன் இருக்க உதவுவதுடன் நம்மை சந்தோஷமாகவும் நேர்மையான சிந்தனை உள்ளவர்களாகவும் இருப்தற்கு வழிவகுக்கும். அடுத்ததாக நமது காலை கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும். கழிவறை செல்வது முதல் பல் துலக்குவது, குளிப்பது மற்றும் தியானம் செய்பவர்கள் தியானம் செய்யலாம். கடவுளிடம் வேண்டுபவர்கள் சிறிது நேரமாவது தினமும் கடவுளை நினைத்து பார்க்க வேண்டும். இந்த காலைக்கடன்களை ஒழுங்கு வர செய்தாலும் தினமும் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

அதை விட்டுவிட்டு சமூக வலைதள பக்கங்களில் நமது கவனத்தை செலுத்த கூடாது. அடுத்ததாக ஒவ்வொரு நாளும் புதிதாக பிறக்கும் பொழுது அந்த நாளை நாம் நேசிக்க வேண்டும். அந்த நாளில் நமக்கு பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் அவை கடந்து போகும்படி நாம் நிதானமாக யோசிக்க வேண்டும். இதுபோல ஒவ்வொரு காலையிலும் நமது கடமைகளை செய்து நமக்கு என்று ஒரு அட்டவணையை ஏற்படுத்தி, குறிப்பான சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, மொபைல் உபயோகிப்பதை தவிர்த்து, காலை நேரத்தை பயன்படுத்தும் பொழுது அந்த நாள் முழுவதும் நமக்கு மகிழ்ச்சியான நாளாகவும் சுறுசுறுப்பான நாளாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Published by
Rebekal

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

7 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

8 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

8 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

9 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

9 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

10 hours ago