குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் சுரேந்திரன் மனைவி புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு.
கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த புகாரில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன், செந்தில்வாகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இவர்களின் சுரேந்தனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்த செய்ய கோரி சுரேந்தரின் மனைவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவக்கூடிய மூடநம்பிக்கைகள் மற்றும் கல்வியறிவு இல்லை, அறியாமையை ஒழிப்பதற்காவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதாகவும், அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று மனுவில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்திருக்கக்கூடிய நிலையில், குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கும், சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு விசாணையை தள்ளி வைத்தனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…