வரலாற்றில் இன்று(27.01.2020)… ரஷ்யா பொதுவுடைமை தலைவர் விளாடிமிர் லெனின் நல்லடக்கம் செய்யப்பட்ட தினம்..

Published by
Kaliraj
  • ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின் அவர்களை செஞ்சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட தினம் இன்று.
  • இந்நாளில் இவரை நினைவு கொள்வோம்.

பிறப்பு:

ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின்  ஏப்ரல் மாதம் 22ம் தேதி, 1870ம் ஆண்டு,  ரஷ்யாவில் உள்ள வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார்.

Image result for lenin red camps

குடும்பம்:

அவரது பெற்றோர் இல்யா உல்யனாவ்  மற்றும் மாயா உல்யானவ் ஆவர். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். இவருக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும்  இருந்தனர்.

பொதுவுடைமை சிந்தனை:

லெனின் ரஸ்யாவில், ஒரு சிறந்த செயல்வீரராக விளங்கினார். அங்கு பொதுவுடமை அரசை நிறுவுவதற்குக் இவர் கண்ணும் கருத்துமாகப் ஈடுபட்டார். இவர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை அரசியல் செயற்படுத்தினார். இதனால், 1917 நவம்பர் முதல் உலகம் எங்கும் பொதுவுடமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகய நிகழ்வை நிகழ்த்திய விளாடிமிர் லெனின் மீது 1918-ஆம் ஆண்டு ஒரு துப்பாக்கி சூடு நடந்தது.

அதை ஒரு ரஷ்யப் பெண் நிகழ்த்தினார். இருப்பினும் அந்நிகழ்வில் லெனின் உயிர் தப்பினார். லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் பொது உடைமை சிந்தனையை உலகிற்கு கொண்டு செல்ல அயராது உழைத்து வந்ததன் காரணமாக, அவருடைய உடல் நலம் சீர் குலைத்தது. இதன் காரணமாக 1922 மே மாதம் லெனினுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. பின் அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியதால் பேச முடியாத நிலையும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, டிசம்பர் மாதம்  இவரது வலக்கையும் செயல் இழந்தது.

இறப்பு:

அதன் பின்   முற்றிலும் செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின் தனது 54-ம் வயதில் 1924-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் நாள் மூளை நரம்பு வெடித்து மரணமடைந்தார். இவருடைய மறைவு உலக  மக்களை பெரும் துயரத்தில் ஆழ்ந்தியது. இத்தகைய சிறந்த கொள்கையை உலகிற்கு வளர்த்து சென்ற மறைந்த லெனின் உடல் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்ட தினம் இன்று. இவருடைய  உடல் பதப்படுத்தப்பட்டு   மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.  இவரது உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை காண  ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து  வருகிறார்கள்.

Published by
Kaliraj

Recent Posts

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

11 minutes ago

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை  : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

28 minutes ago

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…

44 minutes ago

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

10 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

11 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

11 hours ago