வரலாற்றில் இன்று(08.04.2020)…. வந்தே மாதரம் என்ற சொல்லை உருவாக்கிய தேச பற்றாளர் மறைந்த் தினம்…

Published by
Kaliraj

வங்கப் பிரிவினையை எதிர்த்து இந்தியாவில் உள்ள  இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எழுப்பிய வலிமை வாய்ந்த போர் முழக்கமாகவே (யுத்த கோஷ
மாகவே) அந்த மந்திரம் இருந்தது. அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் குரல் என்றே சொல்லலாம். அந்த மந்திர சொல் ”வந்தே மாதரம்” என்பது ஆகும். இந்த வந்தே மாதரம் உருவான வரலாறு குறித்து பார்க்க இருக்கிறோம். ஒருமுறை  கொல்கத்தாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு 1875ஆம் ஆண்டு ஓர் இளைஞன் இரயில் பயணம் மேற்கொள்ளுகிறான். ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டு, இருமருங்கும் பார்க்கிறான். பசுமையான வயல்கள், உயர்ந்த மலைகள், ஓங்கி வளர்ந்த மரங்களில் தொங்கும் காய்கள், கனிகள், ஓடும் ஆறுகள், பாயும் அருவிகள், வீசும் தென்றல் – இவற்றின் அழகில் மயங்குகிறான். அந்த இனிய மயக்கத்தில் பாடுகிறான். ஒரு பாடல் பாடுகிறான். 
வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம் மலயஜ ஷீத்தளாம்!
சஸ்ய ஷ்யாமளாம் மாதரம்…
வந்தே மாதரம் ….தாய்த் திருநாடே! உன்னை
வணங்குகிறேன்!
உன் அழகை ஆராதிக்கிறேன்! உனக்காக என் உயிரையும் தருவேன்!
உன் பாத கமலங்களை முத்தமிடுகிறேன் தாயே!
-என்று உணர்ச்சி பொங்க உள்ளம் உருகிப் பாடுகிறான். இந்த பாடல் அந்த இரயிலில் பயணித்த அனைவரையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் இந்த பாடலை முழுமையாக இயற்றி ஆனந்த மடம் நூலில் வெளியிட்டார். இதற்கு இந்திய்யா முழுவதும் பெரும் வரவேற்பு இருந்தது. மக்களின் உணர்வு பூர்வமான இந்த கோஷத்தை கண்ட  கர்சான் பிரபு,  தடியடியும், துப்பாக்கிச் சூடும்,  “வந்தே மாதரம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடாது என்று ஆங்கிலேயஅரசு தடை விதித்தது. இத்தகைய சுதந்திர போராட்ட தாரக மந்திரத்தை உருவாக்கிய பங்கிம் சட்ட சட்டர்ஜி இவ்வுலகை விட்டு மறைந்த தினம் வரலாற்றில் இன்று……

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

53 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

4 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago