வீட்டிலேயே சுவையான உருளைக்கிழங்கு வடை செய்து அசத்துவது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் உருளைக்கிழங்கை பச்சையாக தோலை சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். அதன் பின் துருவிய உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீர் தானாக விடும். பின் அந்த உருளைக்கிழங்கை கைகளால் எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு தண்ணீரோடு இருக்கும் பொழுது வடை மொறுமொறுப்பாக இருக்காது. அடுத்ததாக பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து உருளைக்கிழங்கையும் அதோடு சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கருவேப்பிலை கொத்தமல்லி தழை மற்றும் வடைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் கடலை மாவு சேர்த்தால் நன்கு ஒட்டிய பதத்திற்கு வரும், தேவைப்பட்டால் கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளலாம். பின் இவற்றை உருண்டையாக பிடித்து தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் மொறு மொறு என்ற உருளைக்கிழங்கு வடை தயார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…