காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இட்லி, தோசைகளை சாப்பிடாமல் எதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று நாம் ஆரோக்கியமான, சுவையான காய்கறி ஊத்தப்பம் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
காய்கறி கலவை : முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின் இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக கிளறி ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஊத்தப்பம் : அதன் பின்பு தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, அதன் மேல் தோசை மாவை ஊற்றி பின் நாம் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை எடுத்து தோசை மீது தூவவும். பின், இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை சுட்டு எடுத்து கொள்ளவும்.
அவ்வளவுதான் அட்டகாசமான ஊத்தப்பம் தயார். இதை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். நிச்சயம் ஒருமுறை செய்து பாருங்கள்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…