ரசத்தில் பலவகை உண்டு. ஒவ்வொரு ரசமும் ஒவ்வொரு விதமான சுவையுடன் இருக்கும். இதில் பருப்பு ரசம் அட்டகாசமாக இருக்கும். இந்த பருப்பு ரசம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து அதை நன்றாக பிசைந்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது கையால் பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பூண்டு, சீரகத்தை இதனுடன் சேர்த்து வதக்கவும். அதன் பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கொத்தமல்லியையும் இதனுடன் சேர்த்து தாளிக்கவும்.
பின்பு எடுத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து லேசாக கொதிக்க விட வேண்டும். பின் பருப்பை அவித்து அந்த தண்ணீரை இதனுடன் சேர்த்து விடவும். இல்லையென்றால் பருப்பை நன்கு அவித்து மசித்து இதனுடன் சேர்க்கவும். அதன்பின் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அட்டகாசமான பருப்பு ரசம் வீட்டிலேயே தயார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…