அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் அங்கு 219,695 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே வீடு திரும்பினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த சனிக்கிழமை பால்கனியில் இருந்தபடி தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் மிகவும் நலமாக உள்ளேன் என்றும், அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன். தடைகளைத் தாண்டி வாருங்கள், ஓட்டுப் போடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் ட்ரம்ப் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டிய நிலையில், தான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…