கர்ணன் படத்தில் இடம்பெற்ற கண்டா வரச்சொல்லுங்க பாடலை பாடிய கிடக்குழி மாரியம்மாள் என் சொந்த பிள்ளைக்கு பாடுனதா நினைச்சிட்டுத்தான் இந்த பாடலை நான் பாடுனேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் கடந்த 18 ஆம் தேதி வெளியானது. வெளியாகி 3 வது நாளாக இந்த பாடல் யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடலை மாரிசெல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் கிடக்குழி மாரியம்மாள் ஆகிய இருவரும் பாடியுள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த பாடலை பாடிய கிடக்குழி மாரியம்மாள் படத்தில் பாடியதை குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார் இதில் பேசிய கிடக்குழி மாரியம்மாள் ” படத்தில் பட வாய்ப்பளித்த மாரிசெல்வராஜிற்கு நன்றி, அடுத்ததாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது போல் பாடலை பட சொல்லிக்கொடுத்தார். இந்த படத்தின் பாடல் ரெக்கார்டிங் போயிட்டு இருந்த போது நடிகர் தனுஷ் சந்தோஷ் நாராயணனிற்கு போன் செய்து பாடல் மிகவும் அருமையாக இருக்கு அந்த அம்மாவின் ஊர் எங்கு இருக்கிறது என்பதை விசாரி என்று தனுஷ் கூறியதாக சந்தோஷ் என்னிடம் கூறினார்.
தனுஷ் சார் சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது. இன்னும் நான் தனுஷை நேரில் காணவில்லை. என்னோட மகன் வயது தனுஷுக்கு. என்னோட சொந்த பிள்ளைக்கு பாடுனதா நினைச்சிட்டுத்தான் இந்த பாடலை நான் பாடுனேன். இந்தப் பாட்டுக்காக மாரி தம்பிக்கும், சந்தோஷ் நாரயணன் சாருக்கும் பெரிய நன்றிகடன் பட்டிருக்கேன். இதுவரைக்கும் நான் பட்ட கஷ்டத்துக்கு விடியல் வந்திருக்குனு நினைக்குறேன்” என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்த பாடல் பட்டயை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…