”தனுஷை என் சொந்த புள்ளையா நினைச்சு தான் பாடுனேன்- கிடக்குழி மாரியம்மாள்..!

Published by
பால முருகன்

கர்ணன் படத்தில் இடம்பெற்ற கண்டா வரச்சொல்லுங்க பாடலை பாடிய கிடக்குழி மாரியம்மாள் என் சொந்த பிள்ளைக்கு பாடுனதா நினைச்சிட்டுத்தான் இந்த பாடலை நான் பாடுனேன் என்று கூறியுள்ளார். 

நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் கடந்த 18 ஆம் தேதி வெளியானது. வெளியாகி 3 வது நாளாக இந்த பாடல் யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடலை மாரிசெல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் கிடக்குழி மாரியம்மாள் ஆகிய இருவரும் பாடியுள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த பாடலை பாடிய கிடக்குழி மாரியம்மாள் படத்தில் பாடியதை குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார் இதில் பேசிய கிடக்குழி மாரியம்மாள் ” படத்தில் பட வாய்ப்பளித்த மாரிசெல்வராஜிற்கு நன்றி, அடுத்ததாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது போல் பாடலை பட சொல்லிக்கொடுத்தார். இந்த படத்தின் பாடல் ரெக்கார்டிங் போயிட்டு இருந்த போது நடிகர் தனுஷ் சந்தோஷ் நாராயணனிற்கு போன் செய்து பாடல் மிகவும் அருமையாக இருக்கு அந்த அம்மாவின் ஊர் எங்கு இருக்கிறது என்பதை விசாரி என்று தனுஷ் கூறியதாக சந்தோஷ் என்னிடம் கூறினார்.

தனுஷ் சார் சொன்னது எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது. இன்னும் நான் தனுஷை நேரில் காணவில்லை.  என்னோட மகன் வயது தனுஷுக்கு. என்னோட சொந்த பிள்ளைக்கு பாடுனதா நினைச்சிட்டுத்தான் இந்த பாடலை நான் பாடுனேன். இந்தப் பாட்டுக்காக மாரி தம்பிக்கும், சந்தோஷ் நாரயணன் சாருக்கும் பெரிய நன்றிகடன் பட்டிருக்கேன். இதுவரைக்கும் நான் பட்ட கஷ்டத்துக்கு விடியல் வந்திருக்குனு நினைக்குறேன்” என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்த பாடல் பட்டயை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

50 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

1 hour ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago