விபத்தில் சிக்கி ஒரு நொடிப்பொழுதில் நரகத்தையும், சொர்கத்தையும் பார்த்தேன்…. காவல்துறை அதிகாரி!

Published by
Rebekal

கார் விபத்தில் சிக்கிய சில நிமிடங்களில் இதயத்துடிப்பு நின்று, நரகத்தையும் சொர்க்கத்தையும் பார்த்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர்  கூறியுள்ளார்.

பொதுவாக சொர்க்கம், நரகம் ஆகிய இரண்டும் உள்ளது என்று பெரும்பாலும் உலகில் உள்ள அனைத்து மக்களுமே நம்பக் கூடிய ஒன்றுதான். மேலும், பலர் நான் சொர்க்கத்தை பார்த்திருக்கிறேன், நரகத்தை பார்த்திருக்கிறேன் கனவு மூலமாக பார்த்திருக்கிறேன் என்று சொல்லுவது வழக்கம். இருப்பினும் இவை நமது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயமாகவே தற்போது வரை இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு கார் விபத்தில் சிக்கிய ஜெஃப் கூல்டர் எனும் காவல்துறை அதிகாரி ஒருவர் இது குறித்து தனது அனுபவத்தை கூறியுள்ளார்.

அதாவது அவர் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கியதாகவும், விபத்திற்குப் பின்பதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், அவரது இதயத்துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நிற்க தொடங்கியதும் அவரது ஆத்மா உடலை விட்டு வெளியேறுவதை அவர் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். ஒரு இருட்டான பனிமூட்டமான ஒரு பகுதியை அவரால் காண முடிந்ததுடன், அந்நேரம் அவர் தனது மனைவியின் கையை பிடித்துக் கொண்டு இருந்தது அவருக்கு ஞாபகத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பின் ஒரு புறம் சிரிப்பு மற்றும் மறுபுறத்தில் அழுகை சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சில மோசமான உருவங்களை அவர் பார்க்க நேரிட்டதாகவும், அதன் பின் அவருக்கு மீண்டும் உலகில் இருக்கக்கூடிய உணர்வு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த வாழ்க்கை நிகழ்வு பலருக்கும் நரகம், சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை மேலும் உறுதியாக நம்புவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இருப்பினும், சில மருத்துவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் என்றால் ஒருவர் விபத்து காரணமாகவோ அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டோ மரணத்தை நெருங்க நேரிடும் பொழுது, அவர்கள் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக சில காட்சிகளை மனது உருவாக்கும். அதில் ஒரு நிகழ்வு தான் இதுவும் என தெரிவிக்கின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

8 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

9 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

10 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

10 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

11 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago