விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன் – நடிகை சமந்தா!

Published by
Rebekal

விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன், ஆனால் எனது மனவலிமை இப்போது  புரிகிறது என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் விமரிசையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்பு ஹைதராபாத்தில் வசித்து வந்தார் சமந்தா. பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய போவதாக தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அதிகாரப்பூர்வமாக இருவரும் தெரிவித்திருந்தனர். இது இவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து முதல் முறையாக தற்போது சமந்தா பேசியுள்ளார்.

அதில், உங்களுக்கு மோசமான ஒரு நாள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள். அதை புரிந்து கொண்டு உங்கள் கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு விட்டால் உங்கள் வேலை எளிதாகி விடும். நான் ஆரம்பத்தில் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்திருந்தேன். மேலும் எனது விவாகரத்து பிரிவால் நான் நொறுங்கி, இறந்துவிடுவேன் என்று கூட நினைத்தேன்.

ஆனால் நான் எவ்வளவு வலிமையானவள் என்பதை இந்த விவாகரத்து தான் எனக்கு புரிய வைத்துள்ளது. இன்று நான் வலிமையாக இருக்கிறேன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையானவள் என்பது எனக்கே இதற்கு முன்பு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

1 hour ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

3 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago