பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீட்டில் செய்வார்கள். இந்த இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்குக் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இதில் பலருக்கு மிகவும் பிடித்தது தக்காளி சட்னி தான். இந்த சட்னியை எப்படி அட்டகாசமான சுவையில் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் காய்ந்த மிளகாயை காம்பு நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பதாக ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி காய்ந்த மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் சட்டியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின்பு, மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான தக்காளி சட்னி தயார். ஒரு முறை இது போல செய்து பாருங்கள்.
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…