அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் அமெரிக்காவை ஆளும் அதிகாரம் கமலா ஹாரிஸ் கைக்குதான் செல்லும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.
மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.
இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள நெவாடா பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது உரையாற்றிய அவர், ஜோ பைடன், 47 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் செய்ய முடியாததை நான் வெறும் 47 செய்து முடித்ததாக தெரிவித்து, பெருமிதம் கொண்டார்.
அதுமட்டுமின்றி, அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளராக ஜோ பைடன் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும், அமெரிக்காவை ஆளும் அதிகாரம் கமலா ஹாரிஸ் கைக்குதான் செல்லும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…